முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கும் சச்சின்!

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தி படத்தில், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வித்யூ வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜேஷ் மபுஸ்கர் இயக்கத்தில் சர்மான் ஜோஷி, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பெராரி கீ சவாரி. சிறுவன் ஒருவன் பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு காண்கிறான், அவனது கனவு நனவானதா.? அதற்கு அவரது அப்பா, தாத்தா போன்றவர்கள் எப்படி உதவினார்கள் என்பதே இப்படத்தின் கதை.  கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தி உருவாகும் படம் என்பதால் இப்படத்தில் சச்சினின் பெயர் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு சச்சினும் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்த அனுமதித்தது மட்டும் அல்லாமல் சிறப்பு தோற்றத்தில் தோன்ற சச்சின் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ.பி.எல்., போட்டி முடிந்தவுடன் சச்சின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சோப்ரா கூறியுள்ளதாவது, படத்தில் சச்சின் பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். அதுமட்டும் அல்ல படத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியும் இருக்கிறது. அதை நான் இப்போது கூற மாட்டேன். படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதாவது சச்சின் இப்படத்தில் நடிப்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் சோப்ரா. இப்படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More