பெட்ரோல் விலையை லீட்டருக்கு ரூ.1.02 குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதற்கேற்ப இந்தியாவில் பெற்றோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு நாளை 30ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.