பாலியல் பலாக்காரம் செய்ததாக 5 போலீஸார் சஸ்பெண்ட்!


இருளர் சமுதாயப் பெண்கள் நான்குபேரை பாலியல் பலாக்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து திருக்கோவிலூர் காவல்நிலைய போலீசார் 5 பேரை பணி இடை நீக்கம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களை திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்கள் நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட 5 பேரை முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More