காட்டுக்குள் கார்த்தியும் அனுஷ்காவும்!


கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்கும் படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், சாலக்குடி அருகே அடர்ந்த காட்டுக்குள், கடந்த 20 நாட்களாக நடந்தது.

பிரமாண்டமான வீடு செட்.அமைத்து ஷூட்டிங் நடந்தது. இதற்காக சிறப்பு அனுமதி வாங்கி செட் அமைத்திருந்தனர். படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு நேரங்களில் யானைகள், செட் அருகே வந்து தொந்தரவு செய்ததால் படப்பிடிப்பு குழுவினருக்கு பயம் ஏற்பட்டது. செட்டைஉடைத்துவிட்டால் பல லட்சம் இழப்பு ஏற்படும் என்பதால் இரவு நேரத்தில் செட்டை பாதுகாக்க, 20 பேர் நியமிக்கப்பட்டனர். இதுபற்றி இயக்குனர் சுராஜிடம் கேட்டபோது, அடர்ந்த காடு என்பதால் யானைகள் அந்த வழியாகத்தான் தண்ணீர் குடிக்க கீழே இறங்கும். இதனால் செட்டைப் பாதுகாக்க ஆட்களை நியமித்தோம். இந்தப் படம் காமெடி ப்ளஸ் ஆக்ஷன் அதிரடி படம்.

எல்லாரும் ரசிக்கும் படியாக இருக்கும். முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது என்றார்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More