மக்கள் கடும் கொந்தளிப்புடன் இன்றைய தன் போக்குவரத்தை மேற்கொண்டனர். நாள் கூலிக்கு வேலை செல்பவர்கள் தங்கள் வருமானத்திற்கு இடையே இப்படி உயர்த்தப்பட்ட கட்டணத்தால் இனி எப்படி தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று கூறியதோடு அப்படியானால் இனி தங்களது கூலியையும் உயர்த்த வேண்டும் என்று கூறினர்.பலரும் இன்று பேருந்து நடத்துநர்களிடம் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல பேருந்துகளில் இதைக் காண முடிந்தது. சிலர் இந்த ஆட்சியை மாற்றத்திற்காகத்தான் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இப்போது ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று தோன்றுவதாகக் கூறினர்.
இன்று திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அங்குள்ள பொதுமக்களுடன் அப்பகுதிகளைச் சேர்ந்த மாணாக்கர்களும் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பால் விலையும் தங்களைக் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியிருப்பாதகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இனி கடைகளில் தேநீர் விலையும் 7 ரூபாய் அல்லது 8 ரூபாய் ஏன உயருமோ எனக் கவலையாக உள்ளது என்று மக்கள் கூறி தங்கள் நிலையை வெளிப்படுத்தினர்.
ஏழை, எளிய மக்களின் கட்டணங்களை உயர்த்தி அவர்களை மேலும் தாழ்த்தியுள்ளது அரசு.


11/18/2011 11:39:00 am
Tamilan
Posted in: 
